அக்-10 உலக மனநல விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திருச்சி ஆத்மா மருத்துவமனை சார்பில் மன ஆரோக்கியத்தை உலகளாவிய அளவில் அனைவருக்கும் முன்னுரிமை ஆக்குவோம் என்ற கருப்பொருளை முன்னிறுத்தி விழிப்புணர்வு மனித சங்கிலி இன்று நடைபெற்றது.

இந்த மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆத்மா மனநலம் மருத்துவர்கள். அருண்குமார், ராஜா ராம் மற்றும் காவல்துறையினர் தொடங்கி வைத்தனர். மனநலம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலியானது திருச்சி அமெரிக்கன் மருத்துவமனையில் தொடங்கி மாநகராட்சி வரை நடைபெற்றது.

இதில் அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம், கன்மலை தொண்டு நிறுவனம், பீல்ட் ட்ரஸ்ட் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனை சேர்ந்த பயிற்சி செவிலியர்கள் மற்றும் சமூக நல பணித்துறை மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் கைகளை கோர்த்து மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பிரகதீஸ்வரன் கரன் லூயிஸ் ஆகியோ செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *