ஷார்ஜாவிலிருந்து சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இன்று காலை பயணிகள் வருகை புரிந்தனர். இந்நிலையில் விமானத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வெளியேறும் வாயிலில் தடுத்து நிறுத்தினர். பயணிகளை தனிப்பட்ட முறையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில், விமான பயணிகளின் ஆசனவாயில் சில தங்க கட்டிகள் பேஸ்ட் வடிவில் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 869.500 கிராம் எடையுள்ள 24 கேரட் தூய்மையான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 42.30 லட்சம் ஆகும்.

அதேபோன்று மற்றொரு பயணியிடம் இருந்து 709.500 கிராம் எடையுள்ள 24கே தூய்மையான ஒரு தங்ககட்டிகள் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.34.50 லட்சம் ஆகும். பயணிகள் இருவரும் சுங்கச் சட்டம், 1962-ன் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *