திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் கல்லக்குடி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்லப்பா என்கிற காதர்பாஷா வயது 40 இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே கிராமத்தில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். போதிய வருமானம் இன்றி பொருளாதார நெருக்கடியில் குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 6 வருடங்களாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு அளித்து வருகிறார். இந்நிலையில் இன்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மாற்றுத்திறனாளி செல்லப்பா என்கிற காதர்பாஷா இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டர் சிவராசுவிடம் மனு அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்