திருச்சி மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், ஜவுளிக்கடைகள், செல் மால், பழமுதிர்ச்சோலை மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி ஆகியவற்றை நடத்தி வந்தவர் பிரபல தொழிலதிபர் கேஸ் ராமதாஸ். இவர் திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மதியம் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நாளை திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது அதனை தொடர்ந்து நாளை மறுநாள் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *