திருச்சியில் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் தலைமை தபால் நிலையம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று தொடங்கியது.மார்கழி மாதம் அமாவாசை திதியிலேயே அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட வேண்டும். அதன் அடிப்படையில் டிசம்பர் 22 ம் தேதி மாலை 06.30 மணி துவங்கி, டிசம்பர் 23 ம் தேதி மாலை 04.27 வரை அமாவாசை திதி நீடிக்கிறது.

தொடக்க நாளான நேற்று உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் சுதர்சன ஹோமம் நடந்தது. இதைத்தொடர்ந்து கோ பூஜையும், பின்னர் பால், நெய், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை தலைமை தபால் நிலையம் ஆஞ்சநேயர் கோவிலில் 10 ஆயிரத்து எட்டு வடை மாலை மற்றும் 10 ஆயிரத்து எட்டு ஜாங்கிரி மாலையும் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் 1 லட்சத்தி எட்டு வடமாலை, 10 ஆயிரத்தி எட்டு ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது இதில் கலந்துகொண்ட திரளான பக்தர்களுக்கு வடை மற்றும் ஜாங்கிரி பிரசாதமாக வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *