மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்ற திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள் திருச்சி மாநகராட்சி வார்டு 59 பகுதிக்கு உட்பட்ட கல்லுக்குழி டிவிஎஸ் மஹால் கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கல்லுக்குழி மெயின் ரோடு பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்தும் கும்பம் மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் தேமுதிக விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
