திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடக்கறையில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள் பொதுமக்களுக்கு பெரும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள கடைகளில் இருந்து மூட்டை மூட்டையாக கொண்டு வரப்படும் கோழியின் அழுகிய கழிவுகள், கறிக்கடை இறைச்சிகள் பிளாஸ்டிக் பைகள், சலூன் கடையிலிருந்து கொட்டப்பட்ட மனித முடிகள் மற்றும் ஹோட்டல்களில் மிஞ்சிய குப்பை கழிவுகளாலும், இறந்த கால்நடைகளை இந்த குப்பைகளில் வீசிவிட்டு செல்வதால் மேலும் இப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.

அதிலும் ஒரு சில மதுப் பிரியர்கள் குடித்துவிட்டு பாட்டில்களை அங்கே வீசி உடைத்து விட்டும், குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. இந்த குப்பை கழிவுகளால் மக்களுக்கு நோய் தொற்றும் ஆற்றில் கழிவுகள் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் குடிநீர் தேக்க தொட்டி இருக்கிறது இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சமயபுரம் மற்றும் சமயபுரத்தை சுற்றியுள்ள 20 கிராமங்களின் குடிநீர் தேவைக்காக செல்கிறது.

அப்படிப்பட்ட இந்த நீர் தேக்க தொட்டி அருகே மலை போல் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது இந்த குப்பை கழிவுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மண்ணுக்கு அடியில் உள்ள நீருடன் கலப்பதால் தண்ணீரை பருகும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இதற்கான தீர்வு காணப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *