திருச்சி சிறுகனூர் பகுதியிலுள்ள வலையூர் கிராமத்தில் அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருபவர் பிரதீப்.

இவர் வழக்கம் போல் நேற்று இரவு தொழிற்சாலையில் பெட்டிகள் தயாரிக்கும் பணியை முடித்துவிட்டு தொழிலாளர்கள் தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு சென்றதும் தொழிற்சாலையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை தொழிற்சாலையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது 30 லட்சம் மதிப்புள்ள அட்டை பெட்டிகள் தயாரிக்கும் விலை உயர்ந்த இயந்திரங்களின் பாகங்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்