தீபாவளி பண்டிகை நாளை உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட உள்ளனர். வீட்டில் பலகாரங்கள் செய்து புத்தாடை அணிந்து சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளுக்கும் உறவினர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் வெடிகளை வெடித்து கொண்டாடும் இந்த நல்ல திருநாளில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடிக்க வைக்கும் போது கண்களையும் செவிகளையும் கைகளையும் பாதுகாக்கும் வகையில் கவனமாக பாதுகாப்புடன் வெடிகளை வெடிக்க வேண்டும்.

குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது ஏதாவது தீ காயம் ஏற்பட்டால் காயமடைந்தவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் தயாராக உள்ளனர். இந்த தீபாவளியினை திருச்சி மக்கள் மற்றும் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாட வேண்டும் என திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் நேரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *