திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இன்று வாயில் கருப்பு துணி கட்டியும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் வரைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு முகாம் கைதிகள்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் மற்றும் வங்கதேசம், நைஜீரியா,சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் 30 பேர் என 100- க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்நிலையில் காவலர்கள் தங்களை பொய் வழக்கில் கைது செய்துள்ளனர் என்றும், மேலும் தாங்கள் குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றும், தண்டனைக் காலத்திற்கு மேலாக தங்களை சிறப்பு முகாம் சிறையில் அடைத்து வைத்துள்ளனர் எனவும், ஜாமீனில் வந்தவர்களையும் கைது செய்துள்ளதாகவும், கொடுமையான கொரோனா காலத்திலாவது தங்களை விடுதலை செய்ய வேண்டும், குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் தொடர்ந்து பல்வேறு கட்ட உண்ணாவிரத போராட்டங்களையும் கடந்த மாதம் நடத்தி வந்தனர்.மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களை விடுவிக்க வலியுறுத்தி முகாமிற்குள்

இருவர் கத்தியால் வயிறு மற்றும் கழுத்தை கீறிக் கொண்டும், ஒருவர் தூக்கு மாட்டியும், 16 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டும் தற்கொலைப் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று காலை சிறப்பு முகாமில் உள்ளவர்கள் தங்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உருவப் படத்தை வரைந்தும், தங்கள் கோரிக்கைகளை பாதைகள் எழுதி அதனை ஏந்தி இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *