டெல்டா மாவட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். மேலும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் விவசாய பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யவும், திருச்சியில் தூர்வாருதல் மற்றும் வடிகால் பணிகளை முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி உறையூரில் உள்ள திமுகவின் மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரனை,அவரது வீட்டில் நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேயர் அறையில் அமர்ந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். நிகழ்ச்சியின் போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு,பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுசட்டத்துறை அமைச்சர் ரகுபதி,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி விஜயன், மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வணக்கத்திற்குரிய மேயர் திரு மு.அன்பழகன் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *