தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் ஆசி பெற்ற திருச்சி மாநகர 56 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி அவரது கணவர் பி.ஆர்.பி பாலசுப்பிரமணியன் ஆகியோர் இன்று காலை கொட்டும் மழையிலும்

வீதிவீதியாக சென்று அங்குள்ள வீடுகளில் உள்ள வாக்காளர்களிடம் தான் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் பகுதியில் செய்ய உள்ள பணிகள் குறித்து எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என கேட்டு வாக்கு சேகரித்தார்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி கருமண்டபம் 56-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட மாந்தோப்பு முதல் தெரு இரண்டாம் தெரு மற்றும் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது வாக்கு சேகரிக்க வந்த 56-வது வார்டு திமுக வேட்பாளரான மஞ்சுளாதேவி அவரது கணவர் பி.ஆர்.பி பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாலை அணிவித்து சால்வை போற்றி வீர மங்கை மஞ்சுளாதேவிக்கு வீரவாள் வழங்கி தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.

மேலும் அப்பகுதியில் உள்ள பெண்கள் முதல் முதியோர் வரை உள்ள அனைவரும் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *