திருப்தி இல்லாத புகாரர்கள் மீது மறு விசாரணை நடைபெறும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை திருப்தி இல்லாத புகாரர் அளித்தவர்களை மறுபடியும் வர வைத்து அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களையும் வரவைத்து மனு விசாரணை இன்று நடைபெற்றது.

மேலும் உடனடியாக அந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க அறிவுறுத்தி உள்ளார். எனவே நீண்ட கால நிலுவை பிரச்சினைகள் திருச்சி மாவட்டத்தில் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்புகார்தரர்களை மொத்தமாக அமர வைத்து துணை காவல் கண்காணிப்பாளர்களுடன் கலந்துரையாடல் செய்து மனுவிசாரணையை முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *