திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது இதனை திறக்க வேண்டாம் என வலியுறுத்தி திருச்சி பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மனு அளித்தனர்

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஶ்ரீரங்கம் பாஜக மண்டல தலைவர் சதிஷ்குமார் :

“ஸ்ரீரங்கம் திருவண்ணாமலை கோவில் தாலுகா அலுவலகம் அருகே புதிய மதுபான கடை திறப்பதற்கான வேலை நடைபெற்று வருகிறது மதுபான கடை வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே இரண்டு மூன்று முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை

மேலும் நேற்று திமுகவினர் சிலர் அப்பகுதியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள சுவர்களை இடித்து டாஸ்மாக் கடைக்கு பாதை அமைத்து வருகின்றனர் இதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது “என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *