வி.கே.எஸ் குரூப்ஸ் சார்பில் திருச்சி தில்லைநகர் 4-வது கிராஸ் பகுதியில் வி.கே.எஸ் பிளவர் ஷாப் மற்றும் வெட்டிங் டெக்கர் பிரம்மாண்ட புதிய கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக வி கே எஸ் நிறுவனங்களின் உரிமையாளரும், தொழிலதிபருமான செல்வராஜ் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வி கே எஸ் கஸ்தூரி செல்வராஜ், வி கே எஸ் பிளவர் ஷாப் உரிமையாளர் ஹரிஹரசுதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

மேலும் தமிழகத்திலேயே மிகவும் பிரம்மாண்டமான பெரிய அளவிலான பிளவர் ஷாப் திருச்சி மாநகரில் விகேஎஸ் நிறுவனத்தினர் தொடங்கியுள்ளனர். இங்கு மேரேஜ் டெக்கரேஷன், மாலைகள், பிளவர் பொக்கே மற்றும் அனைத்து விதமான பூக்கள் எக்ஸ்போர்ட் உள்ளிட்டவை செய்யப்படுகிறது

இந்த விழாவில் நாகப்பா கார்ப்பரேஷன் உரிமையாளர் ரவி பெரியசாமி, தொழிலதிபர் பாபு, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் சாரநாத் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *