திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கிய அரசியல் மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முத்திரையர் அரசியல் களம் அமைப்பின் சார்பில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த சுப்புலட்சுமி, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், தான் இனி வரும் நாட்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் முனைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்குத் தனது முழுமையான ஆதரவை சுப்புலட்சுமி வழங்கியுள்ளார். தொகுதியின் வளர்ச்சி மற்றும் முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல இக்கூட்டணியே சிறந்தது எனக் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தனது ஆதரவாளர்களும், முத்திரையர் அரசியல் களம் அமைப்பினரும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
