திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி பைகளை வழங்கினார். மேலும் கணவனால் கைவிடப்பட்ட இரண்டு கையும் பெண்களுக்கு இரண்டு தையல் மிஷின் மருத்துவம் மற்றும் கல்வி உதவித் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் காசோலையாக , ஊனமுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவியாக ஒரு லட்ச ரூபாய் காசோலை, கழக பேச்சாளர்களுக்கு அரிசி மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது

நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் வண்ணஅரங்கநாதன் கோவிந்தராஜன் செந்தில் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *