இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 45 நாட்கள் பல்வேறு வகையில் பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில்

தேசிய ஊரக வேலை வாய்ப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி நாச்சிகுறிச்சி வாசன் நகர் பகுதியில் உள்ள பூங்கா எதிரே இன்று நடந்தது. இந்த சட்ட விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்க பொதுநல வழக்கறிஞர் வேங்கைராஜா சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சி நாச்சிகுறிச்சி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி அருண் பிரசாத் உடன் இருந்தார். இந்த சட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் இலவச சட்ட உதவிகள் மற்றும் சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்ற வழக்குகள் பற்றிய விழிப்புணர்வு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், மோட்டார் வாகன விபத்து மற்றும் இலவச சட்ட ஆலோசனை உள்ளிட்டவை வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சட்ட தன்னார்வலர் எழில் ஏழுமலை செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்