விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் அடுத்தடுத்து நகை மற்றும் பணங்கள் கொள்ளை போனது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.ஆனால், எந்த விதமான துப்பும் கிடைக்காமல் போன நிலையில், நேற்று முன்தினம் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.

இந்த விசாரணையில், சாத்தூர் ஆறுமுகநேரி காவல் நிலைய காவல் அதிகாரி கற்குவேல் அதிர்ச்சி திருப்பமாக கைது செய்யப்பட்டார்.அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அவர் தான் என்று உறுதியும் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, காவல் அதிகாரி கற்குவேல் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.மேலும், முன்னதாக கடந்த 2019 ஆம் வருடத்தில் திருநெல்வேலியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கற்குவேலை பணியிடை நீக்கம் செய்த அதிகாரிகள், பணியிடைநீக்கத்திற்கு பின்னர் பணியில் சேர்த்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட கற்குவேல் இங்கும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *