திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக அருந்ததிய சமூகத்தினரை வந்தேறிகள் என்று கூறிய நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் மாணிக் முருகேசன் தலைமை தாங்கினார்.மாவட்ட குழு உறுப்பினர் அறிவழகன் முழக்கங்களை எழுப்பினார்.
ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர்சம்சுதீன்/ மாவட்ட தலைவர் முத்துக்குமார் / மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் மக்கள் பாடகர் கோவன்/மக்கள் கலை இலக்கிய கழக மாவட்ட செயலாளர் ஜீவா /மக்கள் அதிகாரம் மாநில துணைச் செயலாளர் செழியன்/ அமைப்புசாரா மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சைனி /தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் கென்னடி ஆகியோர் உரையாற்றினார்கள். இறுதியாக ஆதித்தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர் ராசாத்தி அம்மாள் நன்றியுரை கூறினார்.