தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைநாளை மதியம் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் அவர் கரூரில் இருந்து சென்னை செல்லும் வழியில் திருச்சி அண்ணா சிலை அருகே அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருந்தது.

அப்போது பாஜகவினர் அவரை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடிக்க பட்டாசுகளை சாலையில் வைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பட்டாசு வெடிக்க அனுமதி மறுத்ததால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது மேலும் பட்டாசு வைக்க மேற்பட்டவர்களை போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும் பாஜகவினர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையும் மீறி சாலையின் நடுவே பாஜகவினர் பட்டாசு வெடித்தனர். மேலும் அங்கிருந்த பாஜக நிர்வாகி ஒருவர் தடுப்பு வேலிகளை போக்குவரத்து போலீசார் முன்னிலையிலேயே எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *