சென்னையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நுங்கம்பாக்கத்தில் தமிழக மாவட்ட அளவிளான குத்துச்சண்டை போட்டி கடந்த ஆகஸ்ட் 13, 14, 15 நடைபெற்றது .இப்போட்டியில் கலந்து கொள்ள திருச்சி மாவட்டத்தில் இருந்து குத்துசண்டை விளையாட்டு வீரர்கள் மொத்தம் 14 நபர்கள் திருச்சி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சார்பில் குத்துச்சண்டை பயிற்சியாளர் செல்வகுமார் தலைமையில் திருச்சியிலிருந்து ரயில் மூலமாக சென்னைக்கு சென்றனர்.

கடந்த 13,14,15 தேதிகளில் பல்வேறு பிரிவுகளில் குத்துசண்டை போட்டிகள் நடைபெற்றது இதில் Senior பிரிவில் மோகனபிரசாத், தங்கமும் ராஜகணபதி, மணிகண்டன், முகேஷ், பாலாஜி ஆகியோர் வெண்களபதக்கும் வென்றார்கள். இளையோர் பிரிவில் அவ்ரித் வெண்களமும், ஜூனியர் பிரிவில் ஜெயகாந்த், கோகுல் ஆகியோர் வெண்கல பதக்கத்தையும், சப் ஜூனியர் பிரிவில் ஆகேஷ் ஆகியோர் வெள்ளி பதக்கத்தையும் அஜய் வெண்கள பதக்கத்தையும் வென்று திருச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *