விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் 59வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் மாவட்ட துணை செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் மாநில துணை செயலாளர் பிரபாகரன் கட்சிக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாநில துணை செயலாளர் அரசு, திருச்சி சட்டமன்றத் தொகுதி செயலாளர் கனியமுதன் மற்றும் நிர்வாகிகள் சிறுத்தை சதீஷ், பரமாவளவன், ஜெயக்குமார், முல்லைவளவன், ஜெயராஜ், குட்டி என்கின்ற அலெக்ஸ் பெஞ்சமின், பசுபதி, பீமநகர் செல்வம், ஸ்டாலின், செந்தில், விக்கி ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *