காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதார விளைநிலங்களையும் பறித்து விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்திக்கச் சென்ற

SDPI கட்சி மாநில செயலாளர் கரீம், வர்த்தகர் அணி மாநில தலைவர் அன்சாரி உட்பட நிர்வாகிகள் மீதான காவல்துறை அராஜக கைதை கண்டித்து திருச்சி பாலக்கரையில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட துணைத் தலைவர் பிச்சைக்கனி பொதுச்செயலாளர் சமீம் அன்சாரி மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத், மதர்வை ஜமால் முகமது, வடக்கு மாவட்ட தலைவர் நியாமத்துல்லா உட்பட 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *