பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தீண்டாமை நடைமுறையில் இருந்து வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும் பல்கலைக்கழகங்களில் விகிதாச்சார அடிப்படையில் சிண்டிகேட் மற்றும் செனட் குழுக்களில் எஸ்.சி, எஸ்.டி நபர்களின் நியமனம் இருக்கவேண்டும். அதை நடைமுறைப்படுத்த வேண்டும் .மேலும் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். எஸ்.சி,எஸ்டி நபர்களுக்கு கௌரவப் பதவிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், வடக்கு மாவட்ட தலைவர் செல்வகுமார்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *