புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவியை அதே பகுதியை சேர்ந்த குழந்தைவேல் வயசு 46 என்பவர் கடந்த 9 11 2021 அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மாணவிக்கு கொலைமிரட்டல் விடுத்து, மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்

குழந்தை வேலுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆறு வருடம் காலம் சிறை தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும் உத்தரவு பிறப்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *