தமிழக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது இதில் மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை” 2022 ஜனவரி முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், பல ஆண்டு காலமாக பதவி உயர்வு இன்றி ஓய்வு பெறும் நிலையில் உள்ள தமைமை ஆசிரியர்கள் பணி தொகுதிக்கு உரிய பதவி உயர்வு கிடைக்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும், மேல்நிலை பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள கடைநிலை ஊழியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *