தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமைகழக அறிவிப்பின்படி பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் கட்டுமானப் பொருள்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் கைவிட வலியுறுத்தியும் கொரோனா காலகட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளை தமிழகத்தில் மூட வலியுறுத்தி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் திருச்சி மாநகர் மாவட்ட கழக தெற்கு மாவட்ட கழக வடக்கு மாவட்ட கழக பேரூர் கழகம் ஒன்றிய கழகம் அனைத்து மாவட்ட சார்பாக நிர்வாகிகளும் திருச்சி மாநகர மாவட்ட பகுதி கழக வட்டக் கழக கிளைக் கழக நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்