பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

வங்கியின் தலைமை அலுவலக பொது மேலாளர் ஸ்ரீவத்ஷா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் சென்னை திருச்சி மதுரை ஆகிய மண்டலங்களை சேர்ந்த வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

 அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் வங்கியின் எம்எஸ்எம்இ திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. குறிப்பாக எம்எஸ்எம்இ கடன் திட்டம் அனைத்து வங்கிகளை விட எங்களது வங்கியில் குறைவாக 6.8 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது இதை தொழிற்சாலை உரிமையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *