திருச்சி பிராட்டியூர் பகுதியில் இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக போக்குவரத்து ஆய்வாளர் இல்லாததால் வாகனத்தை புதுப்பித்தல், உரிமம் பெறுதல், லைசென்ஸ் பெறுதல், வாகனங்களுக்கு எப்சி வாங்குதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளும் வீணாகியுள்ளது. இதனால் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் மட்டுமல்ல, சாதாரண பொது மக்களும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திமுக அரசுக்கு அவப்பெயர் உருவாகும் வகையில் நடந்து கொள்ளும் அதிகாரிகள் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொறுப்பற்ற போக்குவரத்து ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *