திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அண்ணா தி.மு.கழகம் சார்பில் தமிழகத்தில் தொடரும் திமுக அரசின் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும்;

இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி ரத்தினவேல் முன்னாள் கொரோடா மனோகரன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *