மத்திய அரசின் அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்­த­ரப் பிர­தே­சம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் இளை­யர்­கள் வீதி­யில் இறங்கி போராட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ள­னர். ‘அக்­னி­பத்’என்ற புதிய திட்­டத்­தின் கீழ் ராணு­வத்­துக்கு ஆள்­சேர்க்­கப்­படும் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

அதன்­படி, 17.5 முதல் 21 வய­துக்­குட்­பட்ட இளை­யர்­கள் ராணு­வத்­தில் சேர்த்­துக்கொள்­ளப்­ப­டு­வர். எனி­னும் அவர்­க­ளால் நான்கு ஆண்­டு­கள் மட்­டுமே ராணு­வத்­தில் பணி­யாற்ற முடி­யும். அதன் ­பின்­னர் ஓய்­வூ­தி­யம், பணிக்­கொடை ஆகி­யவை வழங்­கப்­பட மாட்­டாது. எனி­னும் துணை ராணு­வப் படை­யில் சேர முன்னுரிமை அளிக்­கப்­படும் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது. இத்திட்­டத்­திற்கு இளை­யர்­கள் மத்­தி­யில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­உள்­ளது. பீகார், உத்­த­ரப் பிர­தே­சம் உள்­ளிட்ட வட மாநி­லங்­களில் கடந்த இரு தினங்­க­ளாக பல்­வேறு பகுதி­களில் போராட்­டங்­கள் நீடித்து வரு­கின்­றன. சில இடங்­களில் வன்­மு­றை­யும் வெடித்­துள்­ளது. திருச்சி ரயில்வே சந்திப்பில் திரண்ட 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரயில்வே இருப்புப் பாதையில் அமர்ந்து தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணுவத்தில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டம் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை இருப்பு பாதையில் இருந்து அப்புறப்படுத்திய ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *