கொரோனா நோய் தொற்றின் 2வது அலை காரணமாக நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் பல சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் முதல் பிளாட்பாரத்தில் இன்று காலை ரயில்வே இருப்பு பாதை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ரயில்வே கேண்டீன் அருகே இரண்டு ட்ராலி சூட்கேஸ் மற்றும் இரண்டு பேக்குகள் கேட்பாரற்று கிடந்தது. மேலும் அருகில் யாரும் இல்லாததால் உடனடியாக ரயில்வே இருப்பு பாதை போலீசார் மோப்ப நாயை வரவழைத்து சோதனை செய்ததில்.

அந்த டிராலி பேக்குகளில் சுமார் 60 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டு ரயில்வே போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இந்த டிராலி சூட்கேஸ் மட்டும் பேக்குகளை யார் கொண்டு வந்தது என்று அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ரயில்வே போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்