திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது இந்நிலையில் நேற்று மாலை பரவலாகவும் இன்று விடியற்காலை முதல் கனமழையும் பெய்து வருகிறது குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று காலை மழை பொழிவு அதிகமாக காணப்பட்டது. மழை என்றாலே மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று காலை பெய்த கன மழையில் உற்சாக குளியல் போடும் ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் மற்றும் அழகர் யானைகளின் குளு குளு குளியல் வீடியோ காட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *