திருச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆல் இந்தியா ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டிகள் மே 28,29 தேதியில் வயலூர் சாலையில் உள்ள ராமலிங்கா நகரில் உள்ள ஸ்பாடிக்ஸ் சொசைட்டி கூட்டரங்கில் நடைபெற்றது இப்பபோட்டியில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஸட்ரா, கர்னாடக ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி, உள்ளிட்ட 9 மாநிலங்களில் இருந்து 29 சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

 இப்போட்டியின் இரண்டாம் நாளான இன்று போட்டிகளில் விளையாடும் சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இரு தினங்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி இறுதி போட்டியில் வெற்றி பெற்று 1முதல் இடத்தை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காந்தி மெர்ரி 2ம் இடத்தை மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சஷிகாந்த் 3ம் இடத்தை தமிழகத்தை சேர்ந்த கண்ணன், 4 ம் இடத்தை ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வெங்கட கிருஷ்ணன் உள்ளிட்டோர் பிடித்தனர். இவர்கள் வருகின்ற பாரா ஏசியன் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *