தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மாலை 21-05-21 திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து பார்வையிடுகிறார். மேலும் மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களுடன் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.முன்னதாக இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் போலீசார், அரசு அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவு இன்று காலை வெளியானது இந்நிலையில் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *