திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 29-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சித் துரை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாைதை செலுத்தினர் .

இந்தநிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், பரணிகுமார் மாமன்ற உறுப்பினர்கள் காஜாமலை விஜி மதிவாணன் ,பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *