திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது அவர் கூறுகையில்,

திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 81 ஆயிரத்து 100 என்ற நிலையில், இதுவரை 13 லட்சத்து 28 ஆயிரத்துமு 901 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

அதாவது திருச்சியில் 61 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ள நிலையில் தற்போது வரும் 10ம் தேதி ஞாயிறு அன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இதில் 600க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த முகாம் நடைபெறும்.70 சதவீதத்தை நாம் எட்டிவிட்டோம் என்றால் 3-வது அலை வராது.

தெருவோரம் வசிப்போர், முகவரியற்றோர் என்று 22 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களில் 50 சதவீதம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது மீதமுள்ளவர்களுக்கும் வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் தொிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *