இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 13 ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இந்தத் தேர்வு தொடர்பான, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் கடந்த ஜூலை 26-ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் கொரோனா உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கும், உடற்தகுதி அளவீட்டில் குளறுபடி உள்ளதாக நீதிமன்றத்தில் 25 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மீண்டும் உடல் தகுதித் தேர்வு நடத்த உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று பெண்கள் 2 பேர் மற்றும் ஆண்கள் 23 பேருக்கு மார்பு, உயரம் அளிக்கப்பட்டது.

இதனை காவல்துறை துணை தலைவர் சரவண சுந்தர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர். கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *