திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலின் திருக்முட முழுக்கு கடந்த 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நான்கு கால பூஜை செய்வதற்காக இன்று காலை 7 ஆம் தேதி கொள்ளிடம் ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனித நீரை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

மேலும் வருகிற 9-ஆம் தேதி காலை 09.01 மணிக்கு மேல் 10.01 மணிக்கு முன்பாக அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் உள்ள அனைத்து சன்னதி விமானம் மற்றும் மூல மூர்த்திகளுக்கு திருமுடமுழுக்கானது வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *