மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசனே தெருவை சேர்ந்தவர் அன்பழகி -68. சீர்காழி நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கணவர் இறந்த நிலையில் குழந்தைகளும் இல்லாததால் தனிமையில் வசித்து வந்துள்ளார். தன்னுடைய வீட்டின் பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு மின் இணைப்பு கொடுத்து பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல் மின் இணைப்பு கொடுத்து விட்டு தூங்கியவர் காலை மின் இணைப்பை துண்டிக்காமல் பீரோவை திறக்க முற்பட்டுள்ளார்.

அப்பொழுது மின்சாரம் தாக்கியதில் அன்பழகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். வெகு நேரம் கடந்தும் அவர் வீட்டை விட்டு வெளியே வராததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோதுதான் மின்சாரம் தாக்கி மூதாட்டி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் இருந்த சீர்காழி போலீசார் அன்பழகியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்