திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா துவங்கி பகல் பத்து ஸ்ரீ நம்பெருமாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இன்று வந்தனர். முன்னதாக ரெங்கா கோபுரம் முன்பு அவர்களுக்கு மாலை மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கருடாழ்வார் சந்நிதி, மூலவர் ரெங்கநாதர் சந்நிதி, தாயார் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி, ராமானுஜர் சந்நிதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஊட்டியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த முப்படைத் தளபதி திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *