திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் ஒன்றாவது தெரு பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மனைவி ஸ்ரீ ரங்கநாயகி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்கு பதிவு செய்து மாயமான தூய்மை பணியாளரான ராகவேந்திரன் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *