ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் சார்பாக, திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் “ரெய்லா” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது,

இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்க தலைவர் Rtn. சத்யநாராயணன் தலைமை வகித்தார், ஸ்ரீரங்கம் எஜூகேஷனால் சொசைட்டி செயலாளர் கஸ்தூரி ரங்கன் முன்னிலை வகித்தார், பள்ளி தலைமை ஆசிரியர், ஏனைய ஆசிரிய பெருமக்கள் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்,

இந்நிகழ்ச்சிக்கு சென்னை Fun Scienzi Fied என்ற நிறுவனத்தில் இருந்து வந்த பிரியா ராஜேஷ் மற்றும் ஜெயஸ்ரீ ஹரி பிரசாத் ஆகியோர் பங்கு பெற்று, மாணவ, மாணவிகளுக்கு அறிவியலை சுலபமாக கற்க செயல்முறை விளக்கத்துடன் கற்பித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர், இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்குபெற்றனர், இறுதியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *