கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணிவதை தடை விதித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி பிரபாத் ரவுண்டானா அருகே இன்று மாலை திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஹிஜாப் அணிவதை கர்நாடக நீதிமன்றம் தடையை கண்டித்து

அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் துணை ஒருங்கிணைப்பாளர் ஹஸ்ஸான்பைஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரையை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே.எம் சரீப் வழங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் சபியுல்லா, துணை செயலாளர் உதுமான் அலி, ஜாக் அமைப்பு முகமது அலி, வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகி அலாவுதீன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ராயல் சித்திக் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கர்நாடகாவின் உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமியருக்கு விரோதமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை கண்டித்து கோஷமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *