திருச்சி – திண்டுக்கல் சாலையில் தீரன்நகரில் காரைக்குடி உணவகத்தில் சாப்பிடுவதற்காக நேற்று முன்தினம் 3 வாலிபர்கள் வந்தனர். அப்போது அவர்கள் கடையின் உள்ளேயே அமர்ந்து சிகரெட்டில் கஞ்சாவை வைத்து புகைக்க முயன்றனர். இதனைக் கண்ட ஹோட்டல் ஊழியர் வாலிபர்களை ஹோட்டலை விட்டு வெளியே போகும்படி கூறினார். இதில் ஆத்திரமடைந்த மூன்று வாலிபர்களும் ஹோட்டல் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கஞ்சா போதையில் இருந்த அந்த மூன்று வாலிபர்களும் திடீரென ஹோட்டலில் இருந்த இரும்பு கம்பி மற்றும் மரக்கட்டையை எடுத்து ஹோட்டல் ஊழியர்களை கடுமையாக கொலை வெறியுடன் தாக்கினர். இதில் ஹோட்டல் கேஷியர் கருணாநிதி தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக கருணாநிதியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடைமலை பட்டு புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் ஹோட்டல் கேஷியரை தாக்கிய ராம்ஜி நகர் கள்ளிக்குடியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் ஜெகதீசன் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கஞ்சா போதையில் இருந்த மூன்று வாலிபர்கள் ஹோட்டல் ஊழியர்களை இரும்பு கம்பி மற்றும் மரக்கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *