மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்

விவசாயிகள் கடந்த 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 11ம் நாளான இன்று அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காததாலும், சுதந்திர இந்தியாவில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க விவசாயிகளுக்கு பேச்சுரிமை இல்லாமலும், வெளியே நடமாட உரிமை இல்லாமலும் காவல் துறையினர் வீட்டு காவலில் வைத்துள்ளதால் 11-ம் நாளான இன்று விவசாயிகள் கை, கால்களை சங்கிலியால் பூட்டு போட்டு கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் மாநில துணைதலைவர் பரமசிவம், மாவட்டத் தலைவர் மகேந்திரன், நிர்வாகிகள் சுப்பையா பெரியசாமி, குணசேகரன், பூக்கடை ரங்கராஜ் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *