ஹெல்பிங் பிரண்ட்ஸ் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் +2 முடித்த மாணவ மாணவிகளுக்கான “வெற்றிக்கு வழி காட்டுவோம்” என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டி முகாம் திருச்சி இப்ராஹிம் பார்க் அருகே உள்ள உருது மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடைபெறுகிறது. இந்த கல்வி வழிகாட்டி முகாம் நாளை 18.07.2021 மற்றும் 19.07.2021 ஞாயிறு திங்கள் ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் எனவும், சிறந்த வேலைவாய்ப்பு பெறுவதற்கான கல்வி தேர்ந்தெடுத்து என்ன படிக்கலாம் எனவும், நேர்முக தேர்வுக்கான சிறந்த ஆலோசனைகள் உள்ளிட்ட மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ள பல்வேறு ஆலோசனைகள் வழங்க சிறந்த கல்வியாளர்கள் இம்முகாமில் இடம்பெற்றுள்ளனர். இதனைப் பயன்படுத்தி திருச்சி மாவட்டத்தில் உள்ள பிளஸ் டூ முடித்த மாணவ மாணவிகள் பங்கேற்று பயன் பெறும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *