கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில்
3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப். ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து தமிழகத்தில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் மண்டை ஓட்டுடன் அரைநிர்வாணமாக மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத்தொடர்ந்து வேளாண் சட்டங்கள் அடங்கிய கோப்புகளை கிழிக்க முயற்சித்த போது காவல்துறையினர் அவற்றை பறிக்க முயற்சித்தனர் இதனால் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனை தொடர்ந்து காவல்துறையினர் சமாதான பேச்சு ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அய்யாகண்ணு பேசுகையில்…


மோடி அரசு பதவி ஏற்ற போது விவசாயிகளுக்கு இரட்டிப்பான விலை தரும் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை தரவில்லை. ஆனால் விவசாயி எதிரான சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். விவசாயிகள் வாங்கிய கடனுக்கு பணத்தை கட்ட வேண்டும் என வங்கி அதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். விவசாயி தற்பொழுது விவசாய பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றால் காவல்துறை அவர்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனர்.
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாய பொருட்களுக்கு உரிய விலையை கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *