கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் விழா தமிழ்நாட்டில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

வ.உ. சிதம்பரம் பிள்ளை 150 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக சார்பில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் சிவபதி, இணைச் செயலாளர் சீனிவாசன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில பொருளாளர் சிவசுப்பிரமணியன் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் வரகனேரி பார்த்திபன், மாவட்ட செயலாளர்கள் இந்திரன், சிட்டிபாபு, மாநில மகளிரணி செயலாளர் லீமோ சிவக்குமார், பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வ உ சி யின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வஉசியின் முழு உருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் மாநில மாணவரணி செயலாளர் ஏ எம் ஜி விஜயகுமார், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் ஐயப்பன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ப்ரீத்தா விஜய் ஆனந்த் மற்றும் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வ.உ. சிதம்பரம் பிள்ளை 150 வது பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொருளாளரும், முன்னால் அரசு தலைமை கொறடா திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளருமான மனோகரன் தலைமையில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஒத்தக்கடை செந்தில் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *